84 கைதிகளைப் பரிமாறிக் கொண்ட ரஷ்யா மற்றும் உக்ரைன்

ரஷ்யாவும் உக்ரைனும் 84 கைதிகளைப் பரிமாறிக்கொண்டதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர், இது இந்த ஆண்டு இதுவரை நூற்றுக்கணக்கான போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்ட தொடர் பரிமாற்றங்களில் சமீபத்தியது.
வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க பிரதிநிதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையேயான உயர்மட்ட உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்தப் புதியது நடந்தது.
“நான் என் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டேன். நேர்மையாகச் சொன்னால், இது நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை” என்று பரிமாறிக்கொண்ட கடற்படை வீரரான 29 வயதான மைக்தா கலிபர்டா குற்பிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில், பரிமாறிக்கொண்ட கைதிகளில் “இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரும்” இருந்தனர், அவர்களில் சிலர் “2014, 2016 மற்றும் 2017 முதல் ரஷ்யர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று உறுதிப்படுத்தினார்.