பதற்றத்திற்கு மத்தியில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கும் ரஷ்யா மற்றும் பெலாரஸ்!

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சிகளை இன்று (12.09) தொடங்க உள்ளன.
இந்த வார தொடக்கத்தில் போலந்து, Zapad-2025 பயிற்சிகளின் போது பெலாரஸுடனான தனது எல்லையை மூடுவதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளிக்குள் நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தியது.
புதன்கிழமை இரவு போலந்திற்குள் நுழைந்த 19 ரஷ்ய ட்ரோன்களில், குறைந்தது ஒரு ஜோடி பெலாரஸ் வழியாக வந்ததாக உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.
“மொத்தத்தில், குறைந்தது பல டஜன் ரஷ்ய ட்ரோன்கள் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் நகர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இன்று ஆரம்பமாகுகின்ற இந்த கூட்டுப்பயிற்சி முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)