850ஆவது கோலை அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது 850ஆவது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.
அல் நாசர் (Al Nassr) அணிக்கும் அல் ஹெசிம் (Al-Hazm) அணிக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அல் நாசர் 5-1 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.
“மீண்டும் சிறப்பாக விளையாடியிருக்கிறோம். தொடர்ந்து முன்னேற்றம் காட்டுகிறோம். இதுவரை 850 கோல்களை அடித்துள்ளேன். அந்தக் கணக்கு தொடரும்,” என்று ரொனால்டோ தமது Instagram பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த 3 ஆட்டங்களில் அவர் 6 கோல்களைப் புகுத்தியிருக்கிறார்.
தற்போது 6 கோல்களுடன், சவுதி லீக்கில் ஆக அதிகமான கோல்களை அடித்த பெருமைக்குரியவராக உள்ளார் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)