இலங்கையில் கோர விபத்து – 30 பேர் காயம்

பெலியத்த ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பெலியத்த நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து டிக்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையிலும் பெலியத்த ஹத்போதிய மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)