ஆசியா

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: காசா, ஏமன், லெபனான் மீது அதிரடி தாக்குதல்

காசா முனை, ஏமன், லெபனான் ஆகிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமனின் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஹூடைடா நகரில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்கு, மின் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 87 பேர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், காசா முனையின் நஸ்ரத் முகாம், ரபா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், லெபனானின் அட்லோன் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் ஆயுதக்கிடங்கை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.

ஒரேநேரத்தில் லெபனான், ஏமன், காசா என 3 பகுதிகளில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

(Visited 33 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்