அதிகரிக்கும் பதற்றங்கள் – கடல்கடந்த உறவுகளை வளர்க்கும் முயற்சியில் ஜேர்மனி!
உலகளாவிய பதற்றங்கள் காரணமாக அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் (Johann Wadephul) கருத்துரைத்துள்ளார்.
ட்ரம்பின் சில சர்ச்சையான கொள்கைகள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ள ஜோஹன் வடேபுல் (Johann Wadephul), அமெரிக்காவின் நீண்ட ஜனநாயக பாரம்பரியத்திற்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அதன் முயற்சிகளுக்கும் ஜெர்மனி நிறைய கடன்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார்.
“உலகளாவிய எழுச்சிகளுக்கு மத்தியில் அட்லாண்டிக் கடல் கடந்த கூட்டாண்மையில் முதலீடு செய்வது இதற்கு முன்பு இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேட்டோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% இலக்கை அடைய ஜெர்மனி உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது கூட்டுப் பொறுப்பை நியாயப்படுத்த” நெருங்கிய கூட்டாளர்களுடன் கூட வேறுபாடுகள் குறித்து உரையாடல் நடத்துவது அவசியம் என்று கூறிய அவர், இது தொடர்பில் அமெரிக்க சகாவான மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.





