ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக பிரபலமான சுற்றுலா தளங்களை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  இத்தாலி,  சைப்ரஸ்,  ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது,  சில இத்தாலிய பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட 12C (53.6F)  வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சைப்ரஸை பொருத்தவரையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் வெப்பநிலை  43C (110F) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்பநிலை 40C எட்டும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர வறண்ட நிலை காரணமாக கடலோரப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதற்காக அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்