இலங்கை செய்தி

கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசி விற்பனை செய்வதில் பிளவுபட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள்

அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்பனை செய்வதில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது, சிலர் கட்டுப்பாட்டு விலையில் வழங்க ஒப்புக்கொள்கிறார்கள், மற்றவர்கள் இது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று மறுத்துவிட்டனர்.

ஒரு கிலோ நாட்டு நெல்லை 122க்கு கொள்வனவு செய்ய முடியாது எனவும், ஒரு கிலோ அரிசியை 220க்கு விற்க முடியாது எனவும் முன்னணி அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தற்போதைய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக பொலன்னறுவை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்களும் அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை வழங்க தீர்மானித்துள்ளன.

நாட்டு அரிசிக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு, நாட்டு நெல் விளைச்சல் குறைவாக இருப்பதே காரணம் என டட்லி சிறிசேன சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் நாட்டு நெல் சாகுபடியை குறைத்துவிட்டதாகவும், 80 சதவீதத்துக்கும் அதிகமான நெல் சாகுபடியாளர்கள் கீரி சம்பா சாகுபடியை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். நெல் சாகுபடியில் இந்த ஏற்றத்தாழ்வைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, பாரிய அரிசி உற்பத்தியாளர் டட்லி சிறிசேனவின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது எனவும் மாரந்தகஹமுலவின் அகில இலங்கை நடுத்தர மற்றும் சிறு அரிசி வியாபாரிகள் சங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தது.

டட்லி சிறிசேனவின் கூற்றை பின்பற்றினால் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி வியாபாரிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என மரந்தகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போது நெல்லின் விலை 130 ரூபா தொடக்கம் 132 ரூபா வரை காணப்படுவதாகவும், அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகள் அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், கடனை அடைக்க வழியின்றி விவசாயிகள் தவிப்பதாகவும் தெரிவித்தார்.

அரிசியின் விலையை நிரந்தரமாக குறைப்பதற்கு பயனுள்ள பொறிமுறையை உருவாக்குமாறு அகில இலங்கை நடுத்தர மற்றும் சிறு அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content