இலங்கை

மருமகனுடன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை கைது!

தனது மருமகனுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் 67 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் மருமகனும் கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

கம்பளை, உலப்பனை பகுதியிலுள்ள இவர்களது வீடு நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோது 200 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மருமகன் ஆட்டோ சாரதியெனவும், இவர்கள் நாவலப்பிட்டிய, கம்பளை உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

இவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறித்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் மகன் கடந்த 24 ஆம் திகதி ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்