இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 5 ஆண்டுகளுக்கு பின்னர் பரிதாபமாக பறிபோன உயிர்

உலகையே அதிரவைத்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார்.

திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளின் இலக்குகளில் ஒன்றான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீதான தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

அந்த தாக்குதலில் அவரது மகனும் உயிரிழந்திருந்தார்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண், சுமார் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமான அன்று சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், அவர்களில் சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அந்தவரிசையில் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திலினி ஹர்ஷனி உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content