இலங்கை

அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்!

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடையை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து நிதியமைச்சு இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை வாரந்தோறும் மீளாய்வு செய்யவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 286 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதுடன்,  வாகனங்கள் உட்பட 930 இதர வாகனப் பொருட்கள் மீதான இறக்குமதி தடை அமலில் உள்ளது.

ஆனால் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் எஞ்சியுள்ள பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை இரண்டு கட்டங்களாக நீக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன் மூலோபாய திட்டத்தின்படி அது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content