இலங்கை

அம்பாறை மாவட்ட செயலாளரை வீட்டுக்காவலில் வைத்த பிரதேச வாசிகள்!

கல்முனை பிரதேசவாசிகளால் அம்பாறை மாவட்ட செயலாளர் சுமார் 2 மணிநேரம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலாளர்  சிந்தக அபேவிக்ரம இன்று (19.10) காலை களப்பயணத்திற்காக கல்முனை வடக்கு பிராந்திய உப செயலாளர் காரியாலயத்திற்கு வருகை தந்ததையடுத்து பிரதேசவாசிகள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர்.

அங்கு, மாவட்டச் செயலாளர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த அலுவலகத்தில் சிக்கிக் கொண்டார்.   அப்பகுதி மக்களுக்கு நியாயமற்ற முறையில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content