இலங்கை

சீயோன் தாக்குதல் : பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி தொடர்புகள் குறித்து வெளியாகும் தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கைதுசெய்து விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனைபெற்றக்கொடுக்கவேண்டும் என குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஐந்து வருட நினைவு தினத்தையொட்டி குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் இன்று (21.04)காலை உயிரிழந்தவர்களின் உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.

குண்டுவெடித்த சீயோன் தேவாலயத்திற்கு வந்த உறவுகள் கண்ணீர்மல்க இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குண்டுத்தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக தாங்கள் குடும்பமாக சந்தோசமாக மகிழ்ச்சியாகயிருந்ததாகவும் இன்று அவை இல்லாமல்போயிவிட்டதாகவும் இதன்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த அஞ்சலியில் குண்டுத்தாக்குதலின்போது தனது இரண்டு கண்களையும் இழந்த சிறுமியும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 83 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content