இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பதிலாக பொது வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய தொகையை சேமிக்க முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா என்ற பரிந்துரைகளை வழங்க சில உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் மீண்டும் ஒரு கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மக்களின் கருத்தை அறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 15 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content