ஐரோப்பா செய்தி

இரண்டு குழந்தை நிதி உதவி தடையை நீக்கும் சட்டம்; பிரித்தானிய நிதி அமைச்சர்   இன்று தாக்கல்

பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி மீதான தடையை நீக்கும் சட்டத்தை நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், இந்தச் சலுகை ‘பிரித்தானியாவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே’ வழங்கப்பட வேண்டும் என்று நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரேச்சல் ரீவ்ஸ், ஒரு குழந்தையின் தோல் நிறத்தைக் கொண்டு அவர்கள் வறுமையில் வாடலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

‘அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு தாய் என்.எச்.எஸ் (NHS) பணியாளராக இருந்து, அவர் வேறு நாட்டில் பிறந்தவர் என்பதற்காக அவரது குழந்தைகள் வறுமையில் வாட வேண்டும் என்று கூறுவது ஏற்க முடியாதது’ என அவர் சாடியுள்ளார்.

இந்தச் சட்டத்தின் மூலம் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 5.5 லட்சம் குழந்தைகள் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள் எனத் எதிர்பார்க்கப்படுகிறது

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!