எரிபொருள் நுகர்வை குறையுங்கள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தமையே
இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்துள்ளதாக கூறிய அவர் அபாயத்தை குறைத்துக்கொள்ள
நுகர்வைக் கட்டுப்படுத்துமாறும் மீண்டும் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.





