யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட சில கட்டடங்களுக்கு பருத்தித்துறை பிரதேசசபை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான நோட்டீஸ் அல்லது அறிவிப்பு அந்த கட்டடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் உள்ள வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)





