இலங்கை செய்தி

சுடப்பட்ட சீதா என்ற யானையின் உடலில் இருந்து இரும்பு உருண்டைகள் மற்றும் ஈயத் துண்டுகள் மீட்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சீதா என்ற யானைக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சத்திரசிகிச்சையின் போது உடலில் இரும்பு உருண்டை மற்றும் பல ஈயத் துண்டுகள் காணப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

ரணவன பிரதேசத்தில் இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் மார்புப் பகுதிக்கு அருகில் ஒரு இரும்பு உருண்டை மற்றும் சில ஈயத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் மார்புப் துவாரத்தில் அல்லது நுரையீரலில் அதிக இரும்பு உருண்டைகள் உள்ளதா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுவதாக பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அசோக தங்கொல்ல, சீதா யானைக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், யானையின் உடலில் தற்போது காணப்படும் பலவீனமான நிலைமைகள் வெளிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்நிலைமையின் பிரகாரம் யானையின் உடலில் மேலும் உலோக பாகங்களை அகற்ற அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரியதாகவும், நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த இரும்புப் பந்துகள் யானையின் மார்புப் பகுதியில் உள்ளதா என்பதைக் கண்டறியும் வாய்ப்பு தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

அதற்குத் தேவையான உபகரணங்களோ, முறையான வழிமுறைகளோ தங்களிடம் இல்லை எனவும், இது மிகவும் மோசமான நிலைமை எனவும் பேராசிரியர் அசோக தங்கொல்ல குறிப்பிட்டுள்ளார்.

சீதா யானை சாதாரணமாக சாப்பிட்டாலும், அதனது உடல்நிலை ஏதோ ஒரு வகையில் பலவீனமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது என்றார் பேராசிரியர்.

இதற்கிடையில், சீதா யானையின் உரிமையாளர் ரப்பர் தோட்டாக்களால் சுடப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்த கருத்து பொய்யானது என தற்போது தெரியவந்துள்ளதாவும் கூறியுள்ளார்.

யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், இதற்கு வனவிலங்கு பாதுகாப்புத் துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சீதா அதனாவின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!