பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை வீழ்ச்சி : 45 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
பருவமழைக்கு முந்தைய மழை கடந்த 26ஆம் தேதியில் இருந்து பெய்து வரும் நிலையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு மாகாணமாக கைபர் பக்துன்க்வா மிகவும் மோகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 13 பேரும், சிந்துவில் ஏழு பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாபில் 39 பேர் காயம் அடைந்தனர். சிந்துவில் 16 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 11 பேரும், பலுசிஸ்தானில் 2 பேரும் காயம் அடைந்தனர்.
50 வீடுகளில் முற்றிலும் சேதடைந்துள்ளனர். 39 வீடுகள் லேசான சேதம் அடைந்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)