Rebuilding Sri Lanka’ஜனாதிபதி செயலணி – வர்த்தமானி வெளியீடு
‘டிட்வா’ புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது.





