ஐரோப்பா செய்தி

உக்ரைன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார் – புட்டின் அறிவிப்பு

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்குப் பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்கள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில் புதின் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது அமைச்சர்கள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புட்டின் பேசியதாவது:

அரியவகை கனிமங்கள் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து கூட்டாண்மை நாடுகளுடனும் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா பெருமளவில் அலுமினியம் இறக்குமதி செய்துவந்தது. அதை அந்த நாடு மீண்டும் தொடங்கலாம்.

உக்ரைனில் இருப்பதைவிட ரஷ்யாவில் மிக அதிகமாக கனிம வளம் உள்ளது. அரியவகைக் கனிமங்களை தோண்டியெடுப்பதற்காக அமெரிக்காவுடன் மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தில் உக்ரைன் பகுதியாக இருந்து தற்போது ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளும் இடம் பெறும் என புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content