உலகம் செய்தி

அவுஸ்திரேலியாவில் பலருக்கு ஆபத்தாக மாறியுள்ள எலி விஷம்

அவுஸ்திரேலியாவில் ஒருவகை எலி விஷம் கலந்த உணவை உட்கொண்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குயின்ஸ்லாந்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் உள்ளடக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம், எலி விஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பின், இவர்கள் அனைவரும் பிராடிபாகம் (Brodifacoum) என்ற எலி விஷத்தில் காணப்படும் மூலப்பொருளை உட்கொண்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிராடிபாகம், இரத்த உறைதலுக்குத் தேவையான விட்டமின் கே-யுடன் குறுக்கிட்டு இரத்தத்தை மெலிதாக்கும் தன்மை கொண்டது. இந்த நோயின் அறிகுறிகளாக அதிக இரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் எளிதில் சிராய்ப்பு போன்ற தீவிரமான அறிகுறிகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆபத்தான மூலக்கூறுகளை உட்கொள்வதில் மனித உயிர்களுக்கு ஆபத்தாக மாறலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் டிம் நிக்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 7 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி