இலங்கை செய்தி

சிறுமியை பலாத்காரம் செய்ய நபருக்கு ஏற்பட்ட கதி – 30 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார  குற்றவாளிக்கு இன்று (24) தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவை லக்ஷபதி கனகரத்ன மாவத்தையில் வசிக்கும் ரஜீவ ரவிநாத் ஜயதிலக்க என்ற 38 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி முதல் மார்ச் வரை 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

சந்தேகநபர் மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு 50,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அபராதம் கட்டாவிட்டால் ஆறு மாத சிறை தண்டனையும், நஷ்ட ஈடு வழங்காவிட்டால் 18 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content