இலங்கை

”ஜனாதிபதி தேர்தளுக்கு முன் பாராளுமன்றத்தை கலைத்துவிடும் ரணில்”? எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்க சிக்கலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர்,அவர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போகின்றேன் என்று சொல்லும்போதே சந்தேகம் ஏற்படுகின்றது பாராளுமன்றத்தை அதற்கு முன்பாக கலைத்துவிடுகின்றாறோ என்று என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை உறுப்பினர்களை சந்தித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெறுவதையொட்டி தொகுதிக்கிளைகளின் கருத்துகளை பெறுவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டாலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவு கோரும் வகையிலான கூட்டமாக நடைபெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content