இலங்கை

சிங்கப்பூர் பயணமானார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21.08) அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் குறித்த விஜயத்தில் ,  ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப்பை சந்திக்கவுள்ளார். அத்துடன்  சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பல அரசாங்க அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

பாரிஸ் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் கார்பன் நடுநிலைமை தொடர்பான இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி நாட்டில் இல்லாத இந்த இவ்விரு நாட்களிலும்,  ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்  கனக ஹேரத், பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக  அனுப பாஸ்குவால், பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content