இலங்கை

இலங்கை: யாழில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை சந்தித்த ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சனிக்கிழமை (மே 25) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இது எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஜனாதிபதி தமக்கு விளக்கமளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் மற்றும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content