இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய ரணில்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம், சர்வதேச ஊடகங்களில் முக்கியமான தலைப்பாக மாறியுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பல முன்னணி ஊடக நிறுவனங்கள், இந்த செய்தியை முன்னணி கட்டுரையாக வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த சம்பவம், உலகளாவிய அரசியல் பார்வையாளர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. தலைப்புகளில், “அரச நிதி முறைகேடு” என்பதே முக்கிய தலைப்பாகியுள்ளது.

இந்நிலையில், உலகத் தலைவர்களில் ஒருவரான மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “ரணில் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!