இலங்கை செய்தி

இலங்கையில் English For All திட்டத்தை அமுல்படுத்த தயாராகும் ரணில்

ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கான வெள்ளை அறிக்கையை கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பினால் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்துள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு இளைஞர் சமூகம் சார்பில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களை மக்கள் விடுதலை முன்னணி கொன்றுள்ளதாகவும், அவர்களின் செயற்பாடுகளால் இந்த நாட்டில் கல்வித்துறையில் 10 வருட பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்கள் விடுதலை முன்னணி இந்த அழிவை செய்யாவிட்டால், இன்று நாட்டில் சிறந்த கல்வி முறை இருந்திருக்கும்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பல ஆண்டுகளாக இந்த நாட்டில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஜனதா விமுக்தி பெரமுனவே காரணமாகும்.

இதன்படி, யார் என்ன சொன்னாலும் English For All என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content