இலங்கை செய்தி

நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe இன்று (28) மதியம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் Magistrate’s Court முன்னிலையானார்.

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் வரும் வழியில் நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி இருந்தனர்.

அவர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்துவிட்டு தனது சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றம் நோக்கி ரணில் சென்றார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கு அரச நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

லண்டனுக்குரிய தனிப்பட்ட பயணத்துக்கு அரச நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க, சிஐடியினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும், அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பிணை வழங்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!