ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.





