அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்வே பேரணி – நாமல்!
நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இந்த விவாதங்களில் இணைந்துள்ளன.
கடந்த காலங்களில், பொதுஜன பெரமுனவிற்குள் மட்டுமே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன, ஆனால் இப்போது நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகிறோம்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கட்டாயப்படுத்துவதே இந்த பேரணியின் நோக்கமாகும். அரசாங்கத்தின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் இந்த பேரணியில் இணைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.





