ஆசியா

பிரேசிலை உலுக்கிய மழை – 5 பேர் மரணம் – 18 பேர் மாயம்

பிரேசிலின் தெற்கே ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனத்த மழையில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 18 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாநிலத்தில் நிலவும் மோசமான வானிலையால் சுமார் 77 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும்படி மாநில ஆளுநரிடம் தாம் பேசியிருப்பதாக அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறியிருக்கிறார்.

எதிர்வரும் நாள்களில் இன்னும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிக்கப்பட்டு வரும் ஆறுகளில் நீரின் அளவு எச்சரிக்கை அளவைத் தாண்டியிருக்கிறது.

இதற்குமுன்னர் கடந்த மார்ச் மாத இறுதியில் பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த மழையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!