இலங்கை

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ரயில் நிலைய அதிபர்கள் : பயணிகள் அவதி!

இலங்கயில் இன்று (30) மாலை 4.30 மணி முதல் புகையிரத பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து விலகுவதாக நிலைய அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று பிற்பகல் கூடிய புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபை தொழில் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம்.

பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதேவேளை, புகையிரத பொது முகாமையாளருடனான பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சுமேத சோமரத்ன நேற்று (29) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பண்டை காலம் நெருங்கியுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தொழிற்சங்க நடவடிக்கையால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்