இலங்கை

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : வலுவான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பந்துல உறுதி!

ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக அமைச்சரவை வலுவான தீர்மானங்களை எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தொடரூந்து பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் இன்று (24.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் பேசிய அவர்,  “பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் பொது முகாமையாளரிடம் பேசி தீர்வு காணுங்கள் என புகையிரத திணைக்களத்திற்கு கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன்  கடந்த காலத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட்டோம்.ஓட்டுனர்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்கலாம்.இன்று அமைச்சரவையில் சொல்ல முயற்சிக்கிறேன் எனவும் அவர் கூறினார்.

மேலும்  பயணிகளின் கோரிக்கை ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதுதான் எனத் தெரிவித்த அவர்,  அமைச்சரவைக்கு மிகவும் கண்டிப்பான முடிவை வழங்குவேன் எனவும் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!