இந்தியா செய்தி

சொகுசு வாகன வரி ஏய்ப்பு தொடர்பாக பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் வீடுகளில் சோதனை

சொகுசு கார் வரி ஏய்ப்புக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க அதிகாரிகள் ‘நும்கோர்’ என்ற குறியீட்டுப் பெயரில் நாடு தழுவிய சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 30 இடங்களில் உயர்மட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இதன் அடிப்படையில் பிரபல நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

குறித்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனத் துறையுடன் நெருக்கமாகப் பணியாற்றும் சுங்க அதிகாரிகள், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கார் ஷோரூம்களிலும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி