இலங்கை செய்தி

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு

அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.

இதனால் கதிரியக்க பரிசோதனைகள் (X-ray), CT பரிசோதனைகள், MRI பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான மமோகிராம் (Mammogram) பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து கதிரியக்க சேவைகளும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாளிகாவத்தை வைத்தியசாலையில் தகுதியற்ற பணியாளர்கள் மூலம் கதிரியக்கப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதை எதிர்த்தும், நோயாளர் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு நாள் போராட்டத்திற்கு அதிகாரிகள் தீர்வு வழங்கத் தவறியதால், இந்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படுவதாகச் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

தகுதியுள்ள வல்லுநர்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபடுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!