இலங்கை

ரத்கம கொலை சம்பவம் ; இரு சந்தேக நபர்கள் கைது

27 வயதுடைய இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை நெகிவத்தை கட்டுடம்பே பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் ரத்கம, பனிவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களில் ஒருவர் இறந்தவருக்கு கடைசியாக அலைபேசி அழைப்பை செய்தவர்.கைது செய்யப்பட்ட இருவரும் தங்களது அலைபேசி தரவுகளை அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் ரத்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!