இலங்கை செய்தி

இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது – உலக வங்கி!

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பொதுத்துறை ஊழியர்கள் இருப்பதாகவும், ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு குறைந்த சம்பளம் மட்டுமே கிடைப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கியோவோக் சாக்சியன் தலைமையிலான  குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அரசாங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா மற்றும் பிற குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்தப் பிரச்சினைக் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையை சரிசெய்து ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அதிக மின்சாரச் செலவுகளை எதிர்கொள்கிறது.

இந்தச் சூழலில், மின்சாரத் துறையில் அவசர சீர்திருத்தங்களின் அவசியத்தையும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை