இலங்கை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஜெய்சங்கர்!

13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரப் பகிர்வை கொண்டுவர  மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்க உறுப்பினர்களுக்கும், நாட்டில் உள்ள அரசியில் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் காணொலி மூலம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா செயல்படுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான வளமான எதிர்காலத்திற்காக கடல், விமானம், எரிசக்தி, வர்த்தக முதலீடு மற்றும் டிஜிட்டல் போன்ற துறைகளில் உள்ள உறவுகள் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பல்லின, பல மொழி மற்றும் பல மத அடையாளத்தை பேணிப் பாதுகாக்க இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதைக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் நல்லிணக்கச் செயற்பாடுகளை எதிர்பார்ப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!