இலங்கை

உறுதியானது மாகாணசபைத் தேர்தல்: விசேட தெரிவுக்குழு அமைப்பு!

மாகாணசபைத் தேர்தல் மற்றும் அது நடத்தப்படும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தின்போது துறைசார் அமைச்சரால் மேற்படி யோசனை முன்வைக்கப்படும்.

இதற்கமைய தெரிவுக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை அமைக்குமாறு எதிரணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன், மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பாதீட்டு உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே தெரிவுக்குழு அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!