இலங்கை

வறிய மாணவர்களுக்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை- புல்மோட்டையில் வறிய மாணவர்களுக்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் இன்று (13) வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் முன் மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை சதாம் முஸ்லிம் வித்தியாலயம், ஜின்னாபுரம் கலவன் பாடசாலை மற்றும் புல்மோட்டை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

புல்மோட்டை சதாம் வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் குச்சவெளி உதவி பிரதேச செயலாளர் பீ. மோஹனமுரளி,புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.டபிள்யூ விஜயகோன், பாடசாலை அதிபர்கள், முஸ்லீம் எயிட் செயற்திட்ட முகாமையாளர் பஸ்லான் தாசிம், முஸ்லிம் எயிட் நிறுவன ஊழியர்கள், மாணர்வர்கள் மற்றும் பெற்றோர் கலந்து சிறப்பித்தனர்.

தூர பிரதேசங்களில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கி வைக்கப்பட்டது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!