இலங்கை செய்தி

விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 8 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் விரிவுரையாளர் ஒருவரை மாற்றக்கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

விரிவுரையாளர் ஒருவரின் முறையற்ற நடத்தை மற்றும் உடல் ரீதியான கேலி கிண்டல்களுக்கு எதிராக கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது.

கடும் மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் மயக்கமடைந்த மற்றும் வாந்தி எடுத்த நிலையில் 8 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மாணவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!