இலங்கை

சிலாபத்தில் புகையிரத பாதையை மறித்து மக்கள் போராட்டம்!

கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் புகையிரத பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புகையிரதம் புத்தளத்திற்கும் சிலாபத்துக்கும் இடையில் உள்ள புலிச்சகுளத்தில் நிறுத்தி கொழும்பு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முற்றுகையால் புகையிரதம் ஸ்தம்பிதம் அடைந்ததுடன், அதன் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டதோடு, கொழும்பு – கோட்டையிலிருந்து சிலாபம் வரையிலான பாதையில் பயணிக்கும் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!