ஐரோப்பா

ஈரானுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் – கொடியை அகற்றியதால் பதற்றம்!

ஈரானில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் கென்சிங்டனில் (Kensington) நேற்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 500 முதல் 1,000 பேர் வரை கலந்துகொண்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் லண்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியை  அகற்றியுள்ளார். இது தொடர்பான காணொளி எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

குறித்த நபர் கட்டிடத்தின் மீது ஏறி தற்போதைய ஈரானிய கொடியை அகற்றியதுடன், இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கொடியை ஏற்றியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!