அமெரிக்காவின் குடியேற்ற அமலாக்க நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் : 2000 காவல்படையை நிறுத்திய ட்ரம்ப்‘!

குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகள் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கும் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக டிரம்ப் நிர்வாகம் கலிபோர்னியா தேசிய காவல்படையை நிறுத்தியுள்ளது.
இதன் விளைவாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சில மோதல்கள் ஏற்பட்டுள்ளன என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க நடவடிக்கைகளை எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் மாநிலத்தில் தொடர்வதால், கலிபோர்னியாவில் “சட்டவிரோதத்தை நிவர்த்தி செய்ய 2,000 தேசிய காவல்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த குறிப்பாணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், மத்திய அரசு “கலிபோர்னியா தேசிய காவல்படையை” கையகப்படுத்த நகர்கிறது, இந்த நடவடிக்கையை “வேண்டுமென்றே எரிச்சலூட்டுவதாகவும், மேலும் பதற்றங்கள் அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.