செய்தி

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்மொழிவு!

இலங்கையில் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தனியார் துறைக்கான சம்பள உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச மாத சம்பளம் ஏப்ரல் 2025 க்குள் ரூ.21,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், ஜனவரி 2026 க்குள் ரூ.30,000 ஆகவும் அதிகரிக்க உள்ளது.

இதற்கு முதலாளிமார் சங்கம் உடன்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!