இலங்கை செய்தி

இலங்கையில் தேர்தலின் போது அமுலாகும் தடை!

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் இதனை தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வாக்கினைப் பதிவு செய்து அந்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசியை எடுத்துச் செல்ல ஏற்கனவே இருக்கின்ற தடையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டத்தின்படி வாக்களிப்பு என்பது இரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனினும் வாக்குச்சீட்டைப் படம் எடுத்து அதன் இரகசியத்தன்மையை பேணாமை சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுறுத்தன் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!