ஐரோப்பா

மத்திய லண்டனில் நடந்த ஊர்வலம் : வெள்ளை புறாக்கள் விடுவிப்பு!

40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் தலைநகரில் உள்ள லிபிய தூதரகத்திற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் நேற்று (17.04) மத்திய லண்டனில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், வெள்ளை புறாக்களையும் பறக்கப்பட்டு சமாதானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

25 வயதான கான்ஸ்டபிள் யுவோன் பிளெட்சர், அப்போதைய லிபிய தலைவர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக கட்டிடத்திற்கு வெளியே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தூதரகத்தின் ஜன்னல்கள் வழியாக சப்மஷைன் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியவர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது பங்கேற்பாளர்கள் பிளெட்சர் இறந்த இடத்தில் உள்ள நினைவுச்சின்னத்தின் அடிவாரத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!