இலங்கை ரயில் பயணிகளுக்கு நாளை முதல் அமுலாகும் நடைமுறை
ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை ரயில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது, ரயிலுக்குள் நுழையும் டிக்கெட்டை சரிபார்க்கும் போது, டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலை ரயில் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகளை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது டிக்கெட் வைத்திருப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
(Visited 10 times, 1 visits today)





