உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்
22 வயதான பிரிட்டிஷ் பாலஸ்தீன ஆதரவு(British pro-Palestinian) ஆர்வலரான உமர் காலித்(Umer Khalid), உடல்நிலை வேகமாக மோசமடைந்து, மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்ததை அடுத்து சிறையில் உண்ணாவிரதம் மற்றும் திரவ(liquid food) போராட்டத்தை முடித்துள்ளார்.
லண்டனில்(London) உள்ள வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ்(Wormwood Scrubs) சிறையில் உள்ள உமர் காலித், ஆபத்தான நிலைக்கு இதயத் துடிப்பு குறைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
தற்போது அவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1981ம் ஆண்டு ஐரிஷ்(Irish) குடியரசுக் கட்சி போராட்டங்களுக்குப் பிறகு பிரித்தானியாவில் இதுபோன்ற மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு பாலஸ்தீன நடவடிக்கை தொடர்பான கைதிகளில் உமர் காலித்தும் ஆவார்.





